Skip to main content

Posts

Showing posts with the label Margazhi Nombu

மார்கழி நோன்பு

மார்கழி நோன்பு/மார்கழி மாதம் விரதம்  மார்கழி நோன்பு இது வருடந்தோறும் மார்கழி மாதம் இந்துக் கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து அவரவர் விருப்பமான கோயிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வர். பொருளடக்கம் பாவை நோன்பு மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பின் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு நீராடி அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று இறைவனைத் துதித்து வழிபடுவர். பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை , நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்வர். நோன்பு காலத்தில் கன்னிப் பெண்கள் திருப்பாவை பாசுரத்தில் இரண்டாம் பாடலில் கூறியபடி நெய் மற்றும் பால் உண்ணாமலும்,கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாமலும், தகாதனவற்றைச் செய்யாதும், நற்செயல்களில் ஈடுபட்டு எந்நேரமும் இறை சிந்தையுடன் நோன்பை கடைபிடிப்பர். திருவெம்பாவை நோன்பு திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பத