Skip to main content

Posts

Showing posts with the label அட்சய திருதியை பூஜை செய்யும் முறை

அட்சய திருதியை 2021

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று பலரால் நம்பப்படுகிறது. ஆனால், அட்சய திருதியை தங்கம் வாங்கும் நாள் மட்டும் இல்லை, நம் வாழ்வில் நீண்டநாள் நிலைக்க கூடிய மங்களகரமான பொருட்கள், சொத்துக்கள் வாங்குவதற்கும் சிறந்த நாள்.  அட்சய திருதியை என்றால் என்ன? தமிழ் மதமான சித்திரை மாதத்தின்  முதல் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் திதி நாளே அட்சய திதியை என்று சாஸ்திரம் சொல்கிறது. ‘அட்சய’ என்றால் சமஸ்கிருதத்தில்  என்றும் குறையாதது என்பது பொருள். இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.  அட்சய திருதியை அட்சய திருதியை பெயர் காரணம்: அட்சய திருதியை  நாளில், முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் உருவாக்கப்பட்டது. இம்மாதம் இந்து கடவுளான திருமாலால் ஆளப்படுபடுகிறது. முனிவரான பரசுராம் அட்சய திருதியை நாளில் பிறந்ததாக நம்பப்படுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராம் அவதாரமும்  ஒன்று. அவர், இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. ப

அட்சய திருதியை பூஜை செய்யும் முறை

அட்சய திருதியை இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.  அட்சய திருதியை 2020 அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையை தூய்மை படுத்தி, கோலமிட்டு அதன்மேல் ஒரு மனைப் பலகையை வைத்து அதன் மேல் வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி சில நாணயங்களை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி சில காசுகளை போட்டு மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். பால் ஒரு டம்ளரில் வையுங்கள். தண்ணீர் ஒரு டம்ளரில் வையுங்கள். தேங்காய் , வாழைப்பழம், வெற்றிலை மற்றும் பாக்கு , பழங்கள் வையுங்கள். அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை போன்ற மலர்களால் பூஜிப்பது சிறப்பானது. கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வை