Skip to main content

Posts

Showing posts with the label அட்சய திருதியை 2020

அட்சய திருதியை நாளில் என்ன வாங்கலாம் ?

அட்சய திருதியை அன்று எதுவும் வாங்கலாம்! அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கும்; பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம்.மகா விஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி இடம் பெற்றமை, பரசுராமர், பலராமர் போன்றவர்கள் அவதரித்த நாள் போன்றன இந்த அட்சய திருதியை நாள் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன. அட்சய திருதியை  வறுமையில் வாடிய குசேலன் தனது நண்பனான கிருஷ்ணனை பார்க்கச் சென்ற பொது கொண்டு சென்ற மூன்று பிடி அவலை உண்டு பதிலாக கோடி கோடியாக செல்வங்களைக் அள்ளிக்கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நாள் என்றே கூறப்பட்டுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது உணவுக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் அட்சய பாத்திரத்தை அவர்கள

அட்சய திருதியை பூஜை செய்யும் முறை

அட்சய திருதியை இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.  அட்சய திருதியை 2020 அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையை தூய்மை படுத்தி, கோலமிட்டு அதன்மேல் ஒரு மனைப் பலகையை வைத்து அதன் மேல் வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி சில நாணயங்களை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி சில காசுகளை போட்டு மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். பால் ஒரு டம்ளரில் வையுங்கள். தண்ணீர் ஒரு டம்ளரில் வையுங்கள். தேங்காய் , வாழைப்பழம், வெற்றிலை மற்றும் பாக்கு , பழங்கள் வையுங்கள். அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை போன்ற மலர்களால் பூஜிப்பது சிறப்பானது. கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வை

அட்சய திருதியை 2020

அட்சய திருதியை   என்பது இந்துக்கள்  மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.  சித்திரை   மாதத்தின் முதல் அம்மாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் என்றும் குறையாது என்று பொருள்.    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி உத்தமமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது. அதிலும், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தினம் மிகவும் உத்தமமான நாளாகவும் வாழ்வில் வளங்கள் குவிக்கும் நாளாகவும் சிறப்பித்து கூறப்படுகிறது. இதுதான் ‘அட்சய திருதியை’.   அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு காரியங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அட்சய திருதியை அட்சய திருதியை 2020 தேதி: ஏப்ரல் 26, 2020 அட்சய திருதியை பூஜை நேரம்: காலை 5:45 - பகல் 12:19