Skip to main content

வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இது திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்புற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது.  இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர்.

வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரலாறு:

இக்கோயில் உருவான காலம் குறிப்பாக அறியப்படாவிடினும், தொன்மையானதாகச் சோழர்களின் காலம் தொட்டே இருப்பதாகக் கூறுவர்.

காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் (பெயர் அறியவில்லை) தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவி கோயில் ஒன்று எழுப்பினான். மூலவரான சிவன் ஆதிநாதர் எனவும், மூலவி ஆதி நாதி எனவும் வழங்கலாயினர். வயலிடை கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று.

வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறப்புக்கள்:

  • தம்மை நாடி வரும் பக்தர்களின் வேண்டுகோட்களை மறவாமல் நிறைவேற்றி அவர்தம் துயரம் போக்குவதால் ஆதிநாதர் என்னும் மூலவரை மறப்பிலி நாதர் எனவும் வழங்குகின்றனர். அக்னி வழிபட்டமையால், ஆதிநாதர் அக்னீஸ்வரன் என்றும் வழங்கலானார்.
  • வடமுகம் நோக்கி அமர்ந்திருக்கும் ஆதிநாயகி இத்தலத்தின் தனிச்சிறப்பு.
  • பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இவரது கையில் உள்ள விளாங்கனி, பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயைகளை நீக்குவதன் உருவகம் எனப் பொருள் கூறுவர்.
  • வயலூரை முத்தித் தலம் எனப் போற்றுவர்.
  • இங்கு தாண்டவக் கோலத்தில் இருப்பினும், உற்சவரின் காலடியில் முயலகன் உருவகம் கிடையாது. தில்லை அம்பல நடராசனைப் போலன்றி, ஆடிய பாதனார் இத்தலத்தில் அமைதியான தோற்றம் கொண்டு காணப்படுகிறார்.
  • தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.
  • இங்குள்ள சக்தி தீர்த்தம் முருகப் பெருமான் தமது வேலால் குத்தி உருவாக்கியது எனக் கூறுவர்.
  • அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட எம்பிரான் முருகப் பெருமான் வயலூருக்கு அவரை அழைத்து அதன் சிறப்புக்களைப் பாமாலையாகத் தொடுக்க வைத்தான்.
  • 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பக்திமானும் சொற்பொழிவாளருமான திருமுருக கிருபானந்த வாரியார், வயலூர் முருகனிடத்தே மாறா பக்தி பூண்டிருந்தார்.
  • திருமணத் தடைகளைப் போக்கும் தலமாக இதனைப் போற்றுகின்றனர்.

வயலூர் சுப்பிரமணிய சுவாமி பாடல்கள்:

"கைத்தல நிறைகனி" எனத்துவங்கும் பாடலை, இங்குள்ள பொய்யாக் கணபதியைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியதாகக் கூறுவர்.

இத்தலத்து முருகப் பெருமானைக் குறித்து அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றினைக் கீழே காணலாம்:

திருவு ரூப நேராக அழக தான மாமாய திமிர மோக மானார்கள் கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு கனவி லாள்சு வாமீநின் மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத கழலு நீப வேல்வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான வரையில் வீசு தாள்மாயன் மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை வயலி மீது வாழ்தேவர் பெருமாளே.

Comments

Popular posts from this blog

Palandi Amman Temple in Adambakkam, Chennai

Palandi Amman Temple Information : About a hundred years ago, an Amman statue appeared when a man from Adambakkam took water from a well. The black stone statue from the earth was sanctified and worshiped as the village god. The oldest statue is now known as Pandi Amman. Palandi Amman Temple  is a hindu temple located at Adambakkam, Chennai. The temple is dedicated to Hindu god Shakti .The temple is open from 6 AM to 12 PM and 5 PM to 8 PM. Palandi Amman Temple  priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. The temple has seperate shrine for lord shiva, lord ganesha and lord muruga. Palandi Amman Temple - Adambakkam Palandi Amman Temple Timing: Palandi Amman Temple opens from 6 AM to 11 AM and 5 PM to 8 PM Palandi Amman Temple Address: Palandi Amman Temple Medavakkam main Road, Adambakkam, Chennai - 600088 Tamil Nadu. Palandi Amman Temple Contact Number: 91 - 044 2244 0496 Palandi Amman Temple - Adambakkam See more temples: Ashtalakshmi...

Bhuvaneswari Amman Temple in Adambakkam, Chennai

Bhuvaneswari Amman Temple Information : Bhuvaneswari Amman Temple is a hindu temple located at Adambakkam, Chennai. The temple is dedicated to Hindu god Shakti .The temple is open from 6 AM to 10 AM and 5 PM to 8 PM. Bhuvaneswari Amman Temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. Amman : Bhuvaneswari City : Adambakkam                          Bhuvaneswari Amman Temple, Adambakkam Bhuvaneswari Amman Temple in Adambakkam Bhuvaneswari Amman Temple Timing: Bhuvaneswari Amman Temple opens from 6 AM to 10 PM 5 PM to 8 PM Bhuvaneswari Amman Temple in Adambakkam   Bhuvaneswari Amman Temple Address: Bhuvaneswari Amman Temple No. 66 / 1984 Andal Nagar, 1st Main Rd, AGS Colony,  Adambakkam, Chennai - 600088 Tamil Nadu. Bhuvaneswari Amman Temple Contact Number: 91 -44-2253 2323 Bhuvaneswari Amman Temple, Adambakkam

Sri Prasanna Lakshmi Narasimhar Temple in Ponniammanmedu

The Sri Prasanna Lakshmi Narasimhar Temple is located at Ponniammanmedu, Chennai. The temple is dedicated to Hindu god Perumal .The temple is open from 6 AM to 11 AM and 5 PM to 8 PM. Sri Prasanna Lakshmi Narasimhar priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. Sri Prasanna Lakshmi Narasimhar have seperate shrines for Lord Sri Naga Narasimhar, Lord Sri Hayagrivar, Lord Sri Ganapati. Sri Prasanna Lakshmi Narasimhar Temple Timing: Sri Prasanna Lakshmi Narasimhar opens from 6 AM to 11 AM 5 AM to 8 PM Sri Prasanna Lakshmi Narasimhar Temple Address: Sri Prasanna Lakshmi Narasimhar Temple Vinobaji St, Kanakan Chatram, Ponniammanmedu, Chennai, Tamil Nadu 600099 Sri Prasanna Lakshmi Narasimhar Temple Contact Number: +91 90031 35035